கேன்டீனில் சுந்தரியோடு சிரித்துப் பேசிக்கொண்டிருந்த ரமேஷைப் பார்த்ததும், அழுதுகொண்டே கம்பெனி வாசலை விட்டு வெளியேறினாள், செல்வி. செல்வி அழுதுகொண்டு போவதைப் பார்த்த அகிலன், அவளின் பின்னே ஓடி வந்தான். "செல்வி! செல்வி! நில்லு. ஏன் இவ்ளோ வேகமாப் போற? உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்" என்றபடி மூச்சிரைக்க ஓடி வந்தான், அகிலன். அவளின் கண்ணீரைத் தன் கையால் துடைத்தான். "ஏன் யாருக்குமே என்ன பிடிக்க மாட்டேங்குது?" "அப்டிலாம் சொல்லாத, உன்ன எல்லோருக்கும் புடிக்கும். நீ எதுக்கும் கவலப்படாத, நீ வேணா பாரு ஒருநாள் அவனாவே உன்ன தேடி வருவான்" என்று அவளை ஆசுவாசப் படுத்தினான். ஆறுதல் வார்த்தைகளுக்கு இடையே அவளுடைய விரல்களை மெதுவாகப் பிடித்துக் கொண்டான். அவளும் எதைப்பற்றியும் யோசிக்காமலும் உதறி விட மனமில்லாமலும் தன் உள்ளங்கை வியர்வையை அவனது உள்ளங்கையில் படரவிட்டாள். மௌனம் பேசிக்கொண்டு இருவரும் விரல்களைக் கோத்தபடியே கம்பெனி பேருந்தில் ஏறினார்கள். வற்றிய கண்ணீரோடு அவன் தோளின் மேல் சாய்ந்து கிடந்தாள். பேருந்து சென்றுகொண்டே இருந்தது. திடீரென ஏதோ ஞாபகம் வந்தவளாய் "ஆமா நீ ஏதோ ஒரு...